இலங்கை செய்தி

செம்மணியில் நாளை விசேட ஆராய்வு -நீதிமன்றம் அனுமதி

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், […]

ஐரோப்பா செய்தி

எண்ணெய் டேங்கர் – நிழல் கப்பல்படை வரை : ரஷ்யா மீது புதிய அழுத்தம்

  • June 17, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முதலாம் உலகப் போரை விட நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த மோதலில், போர்க்களத்தில் உக்ரைன் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் நகரங்கள் இன்னும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இந்நிலையில்  எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். களத்தில் உக்ரைனுக்குச் சாதகமான ஒரு சூழல் […]

இலங்கை

செம்மணியை பார்வையிட தயாராகும் நீதியமைச்சர் – நகர்த்தல் பத்திரம் தாக்கல்

  • June 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு கள விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டதரணி வி.எஸ். நிரஞ்சன், மேற்படி நகர்த்தல் பத்திரம் தொடர்பில் இன்று நீதிமன்ற விசாரணை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்றார். இந்த அமைச்சர் குழுவோடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) விசேட […]

கவலையான முகபாவனையுடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து & பகுப்பாய்வு

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்!! நெதன்யாகுவிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வி

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவிற்கும் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் கிடியான் லெவி இதனை தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஈரான் விவகாரம் நெதன்யாகுவின் வாழ்நாள் திட்டம் என்றும், ஆனால் தற்போதைய ஒப்பந்தம் இஸ்ரேலை பேச்சுவார்த்தை செயல்முறையிலிருந்து முற்றிலுமாக விலக்குவதால், இஸ்ரேலுக்கு நாசவேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் […]

இலங்கை

பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரி பெறப்பட்டது

  • June 16, 2026
  • 0 Comments

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரர் டி.என்.ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்கியுள்ளார். ஜூன் 12 அன்று அனுராதபுர பிரதம நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளால் அவரின் இரத்த மாதிரி இன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 16 அன்று சந்தேக நபர் இரத்த மாதிரி வழங்க வேண்டும் என்றும், பரிசோதனை முடிந்ததும் டிஎன்ஏ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கமையவே தேரரின் இரத்த மாதிரி […]

A vintage behind-the-scenes photograph of Tamil cinema actors Rajinikanth and Vijay smiling together on a film set, with Rajinikanth putting his arm around Vijay's shoulder கருத்து & பகுப்பாய்வு

தலைவரும் தளபதியும்!! ரஜினியை மீறி விஜய் சாதித்தது எப்படி?

  • June 16, 2026
  • 0 Comments

  மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழ் சினிமா ரஜினிகாந்த் என்ற ஒரு மாபெரும் ஆளுமையைச் சுற்றியே இயங்கி வருகிறது என்றால் அதுமிகையாகாது. பாட்ஷா முதல் படையப்பாவின் உணர்ச்சிப் பிரம்மாண்டம் வரை, ரஜினிகாந்த் வெறும் ஒரு நட்சத்திரமாக மட்டும் ஆகவில்லை. அவர், தமிழ் சூப்பர் ஸ்டார் என்ற கருத்தாக்கத்திற்கே புதிய வரையறை கொடுத்தார்.   அவரது செல்வாக்கு சினிமாவை மட்டுமல்ல, பொது விவாதங்கள், ரசிகர் கலாச்சாரம் மற்றும் அரசியல் குறித்த உரையாடல்களையும் வடிவமைத்தது. எனினும் அவருக்கு பின்னர் உருவான […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய போர் கப்பல் ஒன்று ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல், வைட் தீவிலிருந்து சுமார் 20 கடல் மைல் தெற்கே எச்சரிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படகில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச் சூடு இங்கிலாந்தின் கடல் எல்லைக்கு வெளியே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பத்தை தொடர்ந்து ரோயல் படையின் HMS மெர்சி என்ற கப்பல் […]

உலகம்

ஜிம்பாப்வேயில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 09 பேர் பலி

  • June 16, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயில் ரயில் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடவையில்  இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்பு, ரயில் வருகிறதா என்பதை சரிபார்க்க தவறியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜிம்பாப்வேயில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; சராசரியாக தினமும் ஐந்து பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 38 பேர் […]

இலங்கை

திருமலையில் படகு பயணத் திட்டம்

  • June 16, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் பன்குளம் குளத்தில் யானைகளையும் பறவைகளையும் காணும் ஒரு நடவடிக்கையாக, படகுப் பயணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொரவெவ மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷன் அக்மீமன,  கடந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என்றார். மேலும்  உரையாற்றிய அவர்,  “திருகோணமலை கடலோரப் […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வின்போது... இலங்கை செய்தி

பதற வைக்கும் செம்மணி புதைகுழி – இன்றும் எலும்புக் கூடுகள் அடையாளம்

  • June 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 366 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அகழ்ந்தெடுக்கப்பட்ட […]