பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரி பெறப்பட்டது
15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரர் டி.என்.ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்கியுள்ளார்.
ஜூன் 12 அன்று அனுராதபுர பிரதம நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளால் அவரின் இரத்த மாதிரி இன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 16 அன்று சந்தேக நபர் இரத்த மாதிரி வழங்க வேண்டும் என்றும், பரிசோதனை முடிந்ததும் டிஎன்ஏ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமையவே தேரரின் இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளது.




