பதற வைக்கும் செம்மணி புதைகுழி – இன்றும் எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது.
இதன்போது புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 366 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.




