இலங்கை செய்தி

செம்மணியில் நாளை விசேட ஆராய்வு -நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்தரணிகளால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கான அனுமதியை நேற்று பிற்பகல் வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்துக்குச் சென்று, அங்குள்ள தற்போதைய நிலவரங்கள் குறித்து நேரில் கேட்டறியவுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை