சோமாலிய பிரஜைகளுக்கு இனி 'மல்டிபிள்-என்ட்ரி' (Multiple-entry) விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. ஐரோப்பா செய்தி

சோமாலிய பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடு: EU அதிரடி முடிவு

  • June 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தால் சோமாலியர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சோமாலியர்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு மறுத்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சோமாலிய ஜனாதிபதி, தமது நாட்டு மக்களை ஏற்கத் தயார் எனவும், மொழி தெரியாத ஏனைய நாட்டு நபர்களை சோமாலியர்கள் எனக் கருதி திருப்பி அனுப்புவதையே எதிர்ப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். 1991 இல் மத்திய அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் 2006 […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ரஷ்ய கடும்போக்காளர்கள் அழைப்பு

  • June 26, 2026
  • 0 Comments

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் இராஜதந்திர வழிகளை கைவிட்டு போரை தீவிரப்படுத்துமாறு புட்டினிடம் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான கோரிக்கைகள் புதியதல்ல என்றபோதும்   இந்த மாதம் உக்ரைன் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியாவை இலக்காகக் கொண்டு நடத்திய  தாக்குதல்களும், பயணிகள் பேருந்துகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறிய இரண்டு கொடிய தாக்குதல்களும், அந்தக் கோரிக்கைகளை மேலும் கூர்மையாக்கித் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த கோரிக்கைளில்  முழுமையான அணிதிரட்டல்,  கீவ்வின் அரசாங்கப் பகுதியை அழித்தல், ஜனாதிபதி வொலோடிமிர் […]

ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ஆகஸ்ட் 28 திரைக்கு வருகிறது “கராத்தே பாபு”

  • June 26, 2026
  • 0 Comments

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் ” சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பான அரசியல் திரில்லரான கராத்தே பாபு படம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் […]

இலங்கை

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவு

  • June 26, 2026
  • 0 Comments

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில்  37 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இனங்காணப்பட்ட குற்றவாளிகளை  கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம் – வளைகுடா நாடுகளுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது உரிமையை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்  அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு  எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஓமானுக்கு அருகே கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தெஹ்ரான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “தெளிவற்ற ஏற்பாடுகள், மாற்றுப் பாதைகள் அல்லது ஈரானின் பரிசீலனைகளுக்கு அப்பாற்பட்ட […]

அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. உலகம் செய்தி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – வெனிசுலாவில் சர்வதேச மீட்புக்குழுக்கள்

  • June 26, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அவசரப் பணிகளில் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இந்த நிலநடுக்க பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் […]

காசா மற்றும் லெபனானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த மனக்கசப்பு சர்வதேச அளவில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. உலகம் செய்தி

டிரம்ப்-நெதன்யாகு உறவில் விரிசலா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இடையிலான உறவு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகம், இரு தலைவர்களுக்கும் இடையிலான பதட்டங்களை விவரிக்கிறது. செப்டம்பர் 2025-இல் ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தின் இடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப், நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்தார். “எல்லோரும் உன்னால் சோர்வடைந்துவிட்டார்கள், யூதர்களும் […]

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

வரலாற்றில் முதன்முறையாக வரி விவரங்களை வெளியிட்ட பிரித்தானிய மன்னர்

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் முதன்முறையாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வரி விவரங்களை வெளியிட்டுள்ளார் . 2024-25 நிதியாண்டில் மன்னர் 12.9 மில்லியன் பவுண்டுகள் வரியாகச் செலுத்தியுள்ளார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் தனது வரி விவரங்களை இந்த வழியில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். செலுத்தப்பட்ட வரியின் அளவை ஆராயும்போது, ​​இங்கிலாந்தில் அதிக வரி செலுத்துபவர்களில் மன்னர் சார்லஸும் ஒருவர். வேல்ஸ் இளவரசர் வில்லியம், அதே காலகட்டத்தில் 7.76 மில்லியன் பவுண்டுகள் வரி […]

கருத்து & பகுப்பாய்வு

அரச வரலாற்றில் 180 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றிய மன்னர் சார்லஸ்

  • June 26, 2026
  • 0 Comments

அடுத்த ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையின் விரிவான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், அதைத் தனது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக்கொள்ளப் போவதில்லை என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். மன்னரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு  வந்த அரச பாரம்பரியம் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பதிலாக மன்னர் சார்ல்ஸும்  ராணி கமிலாவும் பல ஆண்டுகளாகத் தாங்கள் வசித்து வந்த லண்டன் இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸிலேயே (Clarence House) தொடர்ந்து வசிப்பார்கள் […]

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இலங்கை செய்தி

ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து ராணுவம்

  • June 26, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார். ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எங்கு […]