இலங்கை

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவு

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில்  37 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனங்காணப்பட்ட குற்றவாளிகளை  கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், சிவப்பு அறிவிப்புகள் இல்லாத மேலும் 35 சந்தேக நபர்களும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால  சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்