உலகம் செய்தி

அணுசக்தி ரகசியங்களை வழங்கியோருக்கு ஈரானில் மரண தண்டனை!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் மொசாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Yaqoub Karimpour மற்றும் Nasser Bekerzadeh ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளைப் பற்றிய ரகசியத் தகவல்களை இவர்கள் பகிர்ந்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான இந்த முக்கியமான விவகாரத்தில், நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டிற்கு கசியவிட்டதற்காக இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் இந்தத் […]

உலகம்

ஆஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இந்தியர்கள் பாரிய அளவில் அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

குடியேற்றத்திற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் 30 வரை சுமார் 971,020 இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 5.2 சதவீதத்தை பிடிப்பதாகவும், இது இங்கிலாந்தில் பிறந்த 970,950 பேரை விட சற்று அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தை கொளுத்திய பெண் கைது!

  • May 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடந்த வன்முறையின்போது காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த பூர்வக்குடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பூர்வக்கு மக்கள் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமியொருவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலைச் செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட பிறகு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் திரண்ட மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சந்தேக நபருக்கு தமது கலாச்சார முறைகளின்படி தண்டனை வழங்க அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று […]

ஐரோப்பா

துருப்புக்களை மீளப் பெறும் விவகாரம் : அமெரிக்காவின் உத்தரவிற்காக காத்திருக்கும் நேட்டோ!

  • May 2, 2026
  • 0 Comments

ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவைப் புரிந்துகொள்ள  கூட்டணி அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் ( Allison Hart)  கூறியுள்ளார். இந்த மாற்றம், ஐரோப்பா தொடர்ந்து பாதுகாப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நமது பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான பொறுப்பில் பெரும் பங்கை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக […]

அரசியல் செய்தி

மலையகத் தமிழர்களுக்கான காணி உரிமையும், மும்முனைச் சமரும்!

  • May 2, 2026
  • 0 Comments

மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம் தோல்வியிலேயே முடிந்தது என ஆன்மீக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் நன்மைகள் நடப்பதற்கு மும்மூர்த்திகளின் ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கும் ‘முத்தரப்புகளின்’ சங்கமம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதாவது மலையக அரசியல்வாதிகள், […]

உலகம்

குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பு மருந்துக்கு WHO ஒப்புதல்!

  • May 2, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 18 சதவீதமானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலான இறப்புகளும் பதிவாகியுள்ளன. 2024-ல் மலேரியாவால் 610,000 இறப்புகள் நிகழ்ந்தன, இதில் ஆப்பிரிக்காவில் சுமார் முக்கால்வாசி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும். மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக திரும்பிய தீவிர விசுவாசி!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான Marjorie Taylor Greene கண்டித்துள்ளார். லெபனானில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றார். எப்ஸ்டீன் ஊழல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கிடையேயான அரசியல் உறவு முறிந்து போனது. இவரின் இந்த […]

உலகம் செய்தி

போர் எந்நேரத்திலும் தொடங்கலாம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிப்பதில்லை என்பதால், அந்நாடு எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்று ஈரான் கருதுகின்றது. அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய கருத்துக்கள் வெறும் அரசியல் நாடகம் மற்றும் தங்களின் பொருளாதார நலன்களைக் காப்பதற்கான முயற்சி என்று ஈரான் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக […]

உலகம்

வியட்நாமில் பாண் உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு – பலர் வைத்தியசாலையில்!

  • May 2, 2026
  • 0 Comments

வியட்நாமின் குவாங் ட்ரி (Quang Tri ) மாகாணத்தில் உணவு விஷமாகியமை காரணமாக குறைந்தது 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் பேக்கரி ஒன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல்  அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, சோர்வு மற்றும் நீரிழப்பு போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வரத்தொடங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நரம்பு வழி திரவங்கள், வாய்வழி நீரேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் […]

உலகம்

மெக்சிகோவில் பாரிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்தனர். அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் […]