போர் எந்நேரத்திலும் தொடங்கலாம்!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிப்பதில்லை என்பதால், அந்நாடு எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்று ஈரான் கருதுகின்றது.
அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய கருத்துக்கள் வெறும் அரசியல் நாடகம் மற்றும் தங்களின் பொருளாதார நலன்களைக் காப்பதற்கான முயற்சி என்று ஈரான் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக ஈரான் உறுதியாகத் தெரிவித்துள்ளது.





