ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தை கொளுத்திய பெண் கைது!

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடந்த வன்முறையின்போது காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த பூர்வக்குடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூர்வக்கு மக்கள் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமியொருவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட பிறகு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் திரண்ட மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சந்தேக நபருக்கு தமது கலாச்சார முறைகளின்படி தண்டனை வழங்க அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர்.

இந்த வன்முறையின் போது, பெண்ணொருவர், காவல்துறை வாகனத்திற்குத் தீ வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதுடன், பதற்றத்தைத் தணிக்கக் கைதியை வேறு இடத்திற்கு மாற்றினர்.

கலவரத்தில் பங்கேற்றதற்காக குறித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி