ஐரோப்பா

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க ஸ்டாமர் அழைப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் செர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் காணப்படுவது போல, பேரணிகளைத் தடுப்பது யூத-எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் நடைபெறும் பேரணிகள் யூத சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்ட அவர், யூத-எதிர்ப்பைச் சமாளிக்க ‘சமூகம் தழுவிய பதில் நடவடிக்கை’ தேவை என்றும் வலியுறுத்தினார். கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் […]

இலங்கை

திருக்கோணேஸ்வர ஆலயம் காணி உரிமை தொடர்பில் வழக்கு தாக்கல்!

  • May 2, 2026
  • 0 Comments

திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 01 ரூட். 29 பேச்சஸ், கணிதுண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் 02 ரூட் 01 பேர்ச்சஸ் காணித்துண்டும் , மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணிதுண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை என வெளிப்படுத்தவும் அவற்றுக்கான பாரதீனப்படுத்தல்கட்டளையை (vesting Order)  திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் […]

உலகம் செய்தி

வியட்நாமுடன் அழமான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் உறுதி

  • May 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi), வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை ஹனோய் (Hanoi) நகரில், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் (Le Minh Hung) உடனை ஜப்பான் பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆறு […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • May 2, 2026
  • 0 Comments

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளமை, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

இலங்கை

ஹட்டன் பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தல் நிலை உயர்வு – லண்டனில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

  • May 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் […]

உலகம் செய்தி

ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது. 64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக […]

ஐரோப்பா

துருப்புக்களை திரும்பப் பெறும் அமெரிக்கா – ஜெர்மனி விடுத்துள்ள அழைப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பது “நமது நலனுக்கும் அமெரிக்காவின் நலனுக்கும் உகந்தது” என்று தெரிவித்துள்ளார். ஜெர்மனி உட்பட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா படைகளைத் […]