இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?

  • April 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

உலகம் கல்வி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு!

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. தற்போது அமுலில் உள்ள 10 நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது. லெபனான் எல்லைகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை லெபனான் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலனாகவே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கடும் சீற்றம்!

  • April 23, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் Amal Khalil கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் அல்-அக்பார் என்ற செய்தி நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஊடகவியலாளர்மீது தாக்கங் தாக்குதல் நடத்தவில்லை என எனவும், மீட்புப் பணிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. […]

இந்தியா

வாக்குப்பதிவை 02 மணிநேரம் நீடிக்க விஜய் கோரிக்கை!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்ற  நிலையில், வாக்குப் பதிவை இரண்டு மணிநேரம் நீடிக்க த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப பேருந்துகள் இன்றி தவிக்கும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர். தொடர்புடைய செய்தி ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா, இஸ்ரேலே காரணம்!

  • April 23, 2026
  • 0 Comments

வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi குற்றஞ்சாட்டியுள்ளார். தெஹ்ரானில் தென்கொரிய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, மேற்படி ஆக்கிரமிப்பு தாக்குதல்களை உலக நாடுகள் உறுதியுடன் கண்டிக்க வேண்டும். தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சட்டங்களின்படி ஈரான் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வளைகுடாப் பகுதியில் […]

இந்தியா

ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் பதிவு!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். தற்போதைய நிலவரங்களின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19.38 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீதான தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!

  • April 23, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா இது தொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவு , மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, […]

இலங்கை செய்தி

சைபர் கும்பலிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்! விசாரணை தீவிரம்!

  • April 23, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவு தொடர்பாகவும், இதேபோன்ற […]

செய்தி

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்!

  • April 23, 2026
  • 0 Comments

சென்னை , நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இந்த தேர்தலில் சென்னை – பெரம்பூர் மற்றும் […]

செய்தி விளையாட்டு

உலக்கிண்ண தொடரில் இருந்து ஈரானை நீக்குமாறு ட்ரம்பின் தூதுவர் யோசனை!

  • April 23, 2026
  • 0 Comments

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில் ஒருவராகக் அறியப்படுகின்றார். ஊலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளில் அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் FIFA ஈரான் கோரி இருந்தது. இதனை ஏற்கவில்லை. எனினும், ஈரான் உலக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என FIFA அறிவித்திருந்தது. […]

error: Content is protected !!