இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீதான தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா இது தொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு , மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சாலே, இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிவான், நீதிமன்ற நடைமுறையின்படி, வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரும் சந்தேக நபருக்கு, அதுகுறித்த விடயத்தைப் பரிசீலிப்பதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படி, மூன்றாவது சந்தேக நபர் அத்தகைய வாக்குமூலத்தை அளிக்க உத்தேசித்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க நீதிவான் அவருக்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கினார்.

சந்தேக நபரின் முடிவு குறித்து மே 20 ஆம் திகதி நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!