செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கடும் சீற்றம்!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் Amal Khalil கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் அல்-அக்பார் என்ற செய்தி நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஊடகவியலாளர்மீது தாக்கங் தாக்குதல் நடத்தவில்லை என எனவும், மீட்புப் பணிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!