பனாபொல பிரதேசத்தில் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி 9 வயது சிறுவன் பலி!
கலவான, பொத்துபிட்டி, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டியொன்று கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ‘கன்கானம்லாகே ககன’ என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுவன் சிறுவயது முதலே சுத்தியல், இரும்பு கம்பிகளில் இறப்பர் பட்டிகளை கட்டி சுழற்றுவதை பொழுது போக்காக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (13) வீட்டில் இருந்த கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியொன்றில் இறப்பர் பட்டியை […]













