இலங்கை

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை – திருடப்படும் கடவுசீட்டுகள்

  • January 16, 2024
  • 0 Comments

ஒவ்வொரு நாளும் 10 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் தங்கள் கடவுச்சீட்டுகள் தொலைந்து போவது அல்லது திருடப்படுவது குறித்து புகார்களைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2043 கடவுச்சீட்டுகள் தவறாகப் பதியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் 1578 ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகள் திருடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 168 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் திருடப்பட்ட மற்றும் தவறான பாஸ்போர்ட்டுகளின் எண்ணிக்கையில், அமெரிக்க கடவுச்சீட்டுகள் இரண்டாவது இடத்தில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்கள் வீடுகளில் முடக்கம்

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க், இண்டியானா, லோவா, மைனே உள்ளிட்ட மாகாணங்களில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. சில மாகாணங்களில் வெப்பநிலை மைன்ஸ் 21 டிகிரி வரை பதிவானதால், மக்கள் வீடுகளில் முடங்க நேரிட்டது. முக்கிய நகரங்களில் சாலைகளில் படர்ந்துள்ள பனி பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் இருளில் மூழ்கின. முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அறிவியல் & தொழில்நுட்பம்

சார்ஜ் போடாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி தயாரிப்பு

  • January 16, 2024
  • 0 Comments

50 ஆண்டுகள் வரை சார்ஜ் போடாமல் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முற்றிலும் புதிய வகை பேட்டரியை தாங்கள் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த பேட்டரியானது 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து உழைக்கும் என்றும், சராசரியாக நாம் பயன்படுத்தும் பேட்டரிகளை போல இதற்கு அடிக்கடி சார்ஜ் போடவோ அல்லது பராமரிக்கவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளது. 63 நியூக்ளியர் ஐசோடோப்களை ஒரு சிறிய தொகுதியில் வைத்து, அணுசக்தி […]

விளையாட்டு

தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!

  • January 16, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை சமன் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் பாகுபாடு – கறுப்பின மக்களின் பரிதாப நிலை

  • January 16, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவசரப்பிரிவு மருத்துவப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகின்றது. இதனால் பெண்கள் மற்றும் கறுப்பின மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது நோய்களை மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நிகராக கருதுவதில்லை என கூறப்படுகின்றது. இதனால் உயிரிழப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, மொனாக்கோ போன்ற நாடுகளில் இந்த ஆய்வினை ஐரோப்பிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் பன்றிக்கு வைக்கப்பட்ட குறியால் நபருக்கு நேர்ந்த கதி

  • January 16, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 52 வயதுடைய ஒருவர் பன்றிக்கு குறிவைத்ததில், குறி தவறி குறித்த வேட்டைக்காரர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. இசம்பவ இடத்திலேயே வேட்டைக்காரர் பலியானார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் 2022-2023 காலப்பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற அசம்பாவதங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு பணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

  • January 16, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்காக மக்களிடம் இருந்து மேலதிகமாக வரி அறவிடப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கு ஒரு தொகை பணம் வழங்கப்படவுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது க்லிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக மேலதிகமான வரி ஒன்றை 2021 ஆம் ஆண்டு முதல் அறவிட்டு வருகின்றது. அதாவது co2 என்று சொல்லப்படுகின்ற கரிலமல வாயுவுக்காக ஒரு டன்னுக்கு 2024 ஆம் ஆண்டு 45 யூரோக்களை அறவிட உத்தேசித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இவ்வாறு 2021 இல் இந்த […]

ஆசியா

சிங்கப்பூர் வர முயற்சிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிக்கல்

  • January 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வர முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. பலருக்கு வேலை விசா கிடைத்தும் அவர்களால் சிங்கப்பூர் வர முடியவில்லை என தெரியவந்துள்ளது. விசா வர நீண்ட காலம் காத்திருந்தது போக தற்போது விசா வந்தும் வேலைக்கு சேர நீண்ட காலம் எடுப்பதாக பல வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றன. மனிதவள அமைச்சகம் அனுமதி வழங்கியும் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வேலை விசா உங்களுக்கு வந்தாலும் […]

இலங்கை

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகுின்றது. துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.