கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்தினால் உயர்வு
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலைகள், 02 சதவீதம் உயர்ந்துள்ளன.
இதற்கமைய பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2.90 டொலராக உயர்ந்து 107.51 டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல் WTI கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 2.27 டொலர் உயர்ந்து 102.32 டொலராக பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விநியோகக் கவலைகள் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் புதிய தாக்குதல்கள் மற்றும் வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல் ஆகிய காரணங்களால் இவ்வாறு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




