அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை!
தேசிய அரச சார்பற்ற செயலகத்தில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். காவல் துறை தற்போது அரசியல் இல்லாமல் செயல்படுகிறது. […]













