இந்தியா

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் […]

செய்தி

மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

  • September 9, 2023
  • 0 Comments

வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 820 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தால் பாரிய பொருள், உயிர் சேதம் எற்பட்டுள்ளது. இதில்  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய மாரகேஷ் நகரமும் சேதமடைந்துள்ளது. நிலநடுக்கத்தின் இடிபாடுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் […]

செய்தி

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

  • September 9, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான உத்தேச வீட்டுத் திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயகார,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இனங்காணப்பட்ட பிரச்சினைகளை […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

கனடாவின் கால்கரி நகரில் பயங்கர நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள 142 குழந்தைகள்

  • September 9, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த […]

இலங்கை

கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் நாட்டை விட்டு வெளியேற்றம்! நோயாளர்கள் பாதிப்பு

இரத்தினபுரி, கஹாவத்தை ஆதார வைத்தியசாலையின் கண் வைத்தியர் உரிய அறிவித்தல் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் கைவிடப்பட்டுள்ளனர். அதன்படி, மருத்துவர் சென்றதால் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நாளாந்தம் 150 – 100 கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வாரத்தின் ஆறு நாட்களும் கண்சிகிச்சை ‘கிளினிக் தினங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்டுள்ள கடும் அசௌகரியம் காரணமாக மாற்று கண் வைத்தியரை கஹவத்தை வைத்தியசாலைக்கு கொண்டு […]

இந்தியா உலகம்

G20 அமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க ஒன்றியம்.. (Video)

  • September 9, 2023
  • 0 Comments

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி […]

இலங்கை

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை!

  • September 9, 2023
  • 0 Comments

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (08.09) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்,  திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி,  உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய […]

பொழுதுபோக்கு

’லியோ’ படத்தின் ஆச்சரியமான அப்டேட்டுகள் அடுத்த வாரம் வரும் – அனிருத்

  • September 9, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடலான ’நா ரெடி’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அடுத்த சிங்கிள் பாடல், இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் ரிலீஸ் விழா உள்பட ப்ரமோஷன் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த […]

இலங்கை

கட்டுநாயக்கவில் போலி விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது

  • September 9, 2023
  • 0 Comments

போலியாக தயாரிக்கப்பட்ட விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு […]