ஐரோப்பா

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மூத்த அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, கிழக்கு உக்ரைனில் உள்ள கட்டளை பதவிக்கு விஜயம் செய்த போது, ​​குளிர்காலத்திற்காக ராணுவ வீரர்களை தயார்படுத்துமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது . ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஷோய்கு வோஸ்டாக் கட்டளை இடுகையைப் பார்வையிடுவதைக் காட்டினார், அங்கு அவர் முன் வரிசையில் நிலைமை குறித்து விளக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜெனரல் எப்போது இந்த விஜயத்தை மேற்கொண்டார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை. ஷோய்கு குளிர்காலப் போருக்கான தற்போதைய […]

இலங்கை

முல்லைத்தீவு பகுதியில் இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணவர் வழங்கிய வாக்குமூலம்!

  • October 25, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டின் கழிப்பறை பகுதியில் சடலத்தை புதைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்படி அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,  எங்கள் இருவருக்கு இடையிலும் ஒவ்வொருநாளும் குடும்ப பிரச்சினை ஏற்படும். சம்பவம் தினத்தன்று இருவரும் தாக்கிக்கொண்டோம். நான், மனைவியின் கழுத்தில் தாக்கினேன், அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை தொட்டுப்பார்த்தேன் இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறமாக […]

இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பொறுப்பேற்று கொண்ட திருமதி.பி.கயல்விழி

  • October 25, 2023
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் திருமதி.பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் திருமதி.பி.கயல்விழி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதன் அடிப்படையில் அவர் தனது கடமைகளை இன்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மூதூர் தள வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை வைத்தியசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவுவதாகவும் அவை சீர் செய்யப்பட்டு நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க […]

இலங்கை

இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா கிடையாது; இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • October 25, 2023
  • 0 Comments

ஹமாஸுக்கு எதிரான போரில், இஸ்ரேல் மீது ஐநா சபை குற்றம்சாட்டியிருந்த நிலையில் இனி ஐநா அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேசி இருந்த ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ஹமாஸ் மீதான பதிலடி […]

உலகம்

பிரான்சில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது

பரிசில் உள்ள மிகவும் நெருக்கடியான தொடருந்து நிலையமான Gare de Lyon இற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று குறித்த நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அதையடுத்து தொடருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, சேவைகள் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றும் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அது ஒரு போலி அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 1500 யூரோக்கள் குற்றப்பணமும், தொடருந்து […]

இலங்கை

சதொசவில் சில பொருட்களின் விலை குறைப்பு!

  • October 25, 2023
  • 0 Comments

லங்கா சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ ஒன்று 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைத்திருத்தத்திற்கு அமைய சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 222 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் விலை […]

இலங்கை

மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியில் தேரர் ஒருவரினால் ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இருயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்துசெல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் […]

மத்திய கிழக்கு

ஈரானில் பெண் நடிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

  • October 25, 2023
  • 0 Comments

இஸ்லாமிய குடியரசின் கடுமையான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக ஈரானிய அதிகாரிகள் ஒரு டஜன் பெண் நடிகர்களுக்கு வேலை செய்யத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று ஈரானின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. கடந்த வருடம் 22 வயதான மஹ்சா அமீனி […]

இலங்கை

26 முறை பெயரை மாற்றி அரச வங்கியில் கடன் பெற்ற பெண் : இலங்கையில் சம்பவம்!

  • October 25, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து அரச வங்கியின் ஊடாக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகல பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 26 முறை 26 பேரின் பெயர்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி இந்த நிதி மோசடியை செய்துள்ளார். அரச வங்கியினால் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

திடீரென சிங்களப் பெண்ணாக மாறிய ஜனனி… சொக்க வைக்கும் அழகு… வைரலாகும் ஸ்டில்ஸ்

  • October 25, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்குபற்றி பிரபல்யமானவர் இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி. ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.   இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், தொகுப்பாளராக இருந்தார். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து […]