இலங்கை

தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து – 2 மாதக் குழந்தையின் தந்தை மரணம்

  • August 22, 2023
  • 0 Comments

மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றுடிமாலை மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,, தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – மூடப்பட்ட பாடசாலை

  • August 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலை ஒன்று மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பாடசாலைநிர்வாகம் பெற்றோருக்கு அறிவித்துள்ளது. அடிலெய்டின் கிழக்கில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஆரம்பப் பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக பல பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முக்கிய வசதியை நீக்கும் டுவிட்டர் X நிறுவனம்: பயனாளர்கள் அதிர்ச்சி

  • August 22, 2023
  • 0 Comments

டுவிட்டர் எக்ஸ் செயலியில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதலை தடுக்க ப்ளாக் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ப்ளாக் வசதியை நீக்கம் செய்ய இருப்பதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை வேண்டா வெறுப்பாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி […]

இலங்கை

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

  • August 22, 2023
  • 0 Comments

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு யாழின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று நேற்றுமாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமே சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.அதன் பின்னரே உயிரிழப்புக்கான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி முகாமில் பாரிய வன்முறை – அடிதடியில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர்

  • August 22, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அகதிகளை தங்க வைக்கும் முகாமில் பாரிய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெர்மனியின் ஊனாந் பிரதேசத்தில் அகதிகள் நாட்டுக்குள் முதல் தடவை வந்தால் குறிப்பிட்ட காலம் தங்க வைக்கின்ற அகதி முகாம் உள்ளது. இந்த அகதி முகாமில் 17.08.2023 இல் பாரிய வன்முறை சம்பவம் ஒன்று நடைபெற்றதாக தெரியவந்து இருக்கின்றது. அதாவது இந்த அகதி முகாமில் உள்ள அகதிகள் தங்களிடையே சண்டையிட்டுக்கொண்டதாகவும் இந்த சண்டையில் 100க் கணக்கானவர்கள் பங்கேற்றதாகவும் தெரியவந்திருக்கின்றது. இந்த அகதி முகாமில் மொத்தமாக […]

ஐரோப்பா

பிரான்ஸிற்கு சுற்றுலா சென்ற 2 பெண்களுக்கு நேர்ந்த துயரம்!

  • August 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சுற்றுலா சென்ற 2 பெண்கள் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிரான்ஸிற்கு சென்ற 21 வயதுடைய இரு இளம் பெண்கள், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்துள்ளார். இந்த நிலையில், வீதியில் பயணித்த மற்றொரு ஸ்கூட்டருடன் மோதியுள்ளது. D6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். […]

இலங்கை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை விரைவில் ஆரம்பம்

  • August 22, 2023
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று கடல்சார் உறவுகளை புதுப்பிக்கும் என தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநில மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு, தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகம் இலங்கைக்கு கப்பல் சேவையை வழங்கத் தயாராகி வருவதாக குறிப்பிட்டார். இந்தியாவை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில், […]

ஆப்பிரிக்கா செய்தி

இஸ்லாமிய தீவிரவாதிகளின் முற்றுகையின் கீழ் திம்புக்டு: அனைத்து சாலைகளும் மூடப்பட்டது

  • August 21, 2023
  • 0 Comments

மாலியில் உள்ள புராதன நகரமான திம்புக்டு சில நாட்களாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. AFP இன் படி, உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று ஜிஹாதிகள் “அனைத்து சாலைகளையும் அடைத்துவிட்டனர்,” சஹாரா பாலைவனத்தின் விளிம்புகளில் அமைந்துள்ள வடக்கு நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து சாலைகளையும் திறம்பட மூடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் தெரியாத நிலையில் செய்தி நிறுவனத்திடம் பேசிய உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர், “திம்புக்டுவிற்கும் தெற்கிற்கும் இடையே எதுவும் செல்லவில்லை” என்றும், ஜிஹாதிகள் அருகிலுள்ள நைஜர் ஆற்றின் […]

இலங்கை செய்தி

இலங்கை பங்களாதேஷுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியது

  • August 21, 2023
  • 0 Comments

2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் இலங்கை வாங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. பங்களாதேஷ் வங்கியின் (பிபி) செய்தித் தொடர்பாளரும், நிர்வாக இயக்குநருமான மெஸ்பால் ஹக், ஆகஸ்ட் 17 ஆம் திகதி தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். “எங்களுக்கு முதல் தவணை கிடைத்துவிட்டது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது, என்று ”மெஸ்பால் கூறினார், இந்த ஆண்டுக்குள் இலங்கையிடமிருந்து மொத்தத் […]

இலங்கை செய்தி

கொழும்பு, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழப்பு!! பெற்றோர் குற்றச்சாட்டு

  • August 21, 2023
  • 0 Comments

கொழும்பு, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அவிசாவளை அபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாத வயதுடைய தேஷான் விதுநேத் சுகயீனம் காரணமாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு தேஷான் மாற்றப்பட்டார். குழந்தைக்கு […]