கொழும்பு புறநகர் பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து: ஐவர் பலி
கொழும்பு மாவட்டம், ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர
தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர்.
தீயை அணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. 12 தீயணைப்பு வாகனங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.





