உலகம்

எரிமலை செயற்பாடு – சிலியில் விமான சேவைகள் பாதிப்பு

சிலியில் உள்ள கட்டானியா விமான நிலையம், இன்று பிற்பகல் 04.00 மணிவரை உள்வரும் விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது.

எட்னா மலையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் எரிமலைச் சாம்பல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் விமான நிலையம் 05 நாள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொடர்ச்சியான எரிமலைச் சாம்பல் வெளியேற்றம் விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும், விமான இயந்திரங்களுக்குள் உறிஞ்சப்படும் சாம்பல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடும் என்றும் எரிமலையியல் ஆராய்ச்சியாளர் போரிஸ் பென்கே Boris Behncke  எச்சரித்தார்.

மேலும் தொடர்ந்து நடைபெறும் விமான ரத்துகள் மற்றும் பயணிகளை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுதல் ஆகியவை கடுமையான உள்ளூர் போக்குவரத்து இடையூறுகளையும், அதிக விலையேற்றத்தையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்