கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று – 7000ஐக் கடந்தது
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், வைரஸ் தொற்று புதிய மாகாணம் ஒன்றுக்கும் பரவியுள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
எபோலாவின் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையால் ஏற்பட்ட தொற்று பரவல், காங்கோ வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பரவலாக மாறியுள்ளது.
கடந்த 2014-2016 காலகட்டத்தில், கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 28,600-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 11000 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
தற்போது பரவும் புதியவரை திரிபு இந்த எண்ணிக்கையை விஞ்சியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,398-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், ஏழு மாகாணங்களில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,022-ஐ எட்டியுள்ளது.
இதேவேளை தொற்று பரவலின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில், நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘தெற்கு உபாங்கி’ (South Ubangi) மாகாணத்தில் ஒருவருக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்தனர்.





