உலகம்

ஈராக்கில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் – சவுதியின் குழாய் வழித்தடம் பாதிப்பு

ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களால் கிழக்கு-மேற்கு’ (East–West) குழாய் வழித்தடம் தாக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது.

“ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குழாய் வழித்தடத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈராக் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பதில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், “தனது இறையாண்மை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமையை” சவூதி அரேபியா தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை அது வலியுறுத்தியது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்