மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

டுபாயில் சடுதியாக அதிகரித்த மக்கள் தொகை!

டுபாயில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் அங்கு மக்கள்தொகை 50,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் டுபாய்க்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதன் காரணமாக, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை டுபாய் வழங்கி வருகிறது.

துபாயில் நடந்த Expo 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவர்வதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பெப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் மக்கள்தொகை குறைந்த போதிலும், அதனைத் தொடர்ந்து நடந்த Expo 2020 கண்காட்சி இங்கு மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இதற்கு டுபாய் அரசு கொரோனா பாதிப்பை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் காரணமாக துபாயில் மக்கள்தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50,000-இற்கும் மேல் அதிகரித்துள்ளது.

2023 தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35,50,400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36,03,286 ஆக அதிகரித்துள்ளது.

டுபாய் அரசாங்கம் நிலையான வளர்ச்சிக்கும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முதன்மையான நகர்ப்புற திட்டமிடலுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டது. இதனால் நகர்ப்புற மக்கள்தொகையின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

மக்கள்தொகையின் இந்த அதிகரிப்பு புதிய வீடுகளுக்கான தேவையையும் அதிகரித்துள்ளதுடன், குடியிருப்பாளர்களின் செலவினங்களையும் அதிகரித்தது, அதன் விளைவாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் விரிவடையச் செய்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்

You cannot copy content of this page

Skip to content