காங்கோவில் எபோலா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4000ஐக் கடந்தது
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டியுள்ளது என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
உலகின் இரண்டாவது தொற்று பரவலாக இனங்காணப்பட்டுள்ள எபோலா தொற்றானது மே மாதம் நோய் நிலைமை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பொது சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், 1,850 இறப்புகள் உட்பட, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,053-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நாட்டின் இடுரி (Ituri) , வடக்கு கிவு, தெற்கு கிவு, ஹவுட்-உலே (Haut-Uele) மற்றும் ஷோபோ (Tshopo) ஆகிய ஐந்து மாகாணங்களில் உச்சக்கட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.




