காங்கோவை அச்சுறுத்தும் எபோலா – மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் எபோலா நோய் தாக்கத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் உயர்மட்ட சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு மற்றும் ருவாம்பாராவில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!



