உலகம்

அமெரிக்காவில் ICE முகவர்களின் கீழ் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் ஐ.நா சபை அவதானம்

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிவரவுத் துறையினரின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இன்று வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய வோல்கர் டர்க் Volker Turk, “ஜூன் மாதத்திற்கு பிறகு, அமெரிக்கக் குடிவரவுக் காவலில் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, “2026-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்று கூறிய அவர், “இந்த மரணங்களுக்குப் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க […]

உலகம்

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் HIV தொற்று – ஐ.நா கவலை

  • July 28, 2026
  • 0 Comments

HIV தொற்றுக்கான நிதியுதவிய ட்ரம்ப் குறைத்துள்ள  நிலையில் அந்நோய் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஐ.நா. அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. “சர்வதேச சமூகம், எச்.ஐ.வி-க்கு எதிராகப் பல தசாப்தங்களாகக் கடினமாகப் பெற்ற வெற்றிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் நிதிப் புரட்சிக் காலத்திற்குள் நுழைந்துள்ளதாக யுஎன்எய்ட்ஸ் (UNAIDS) குறிப்பிட்டுள்ளது. பிரேசிலில் நடைபெறும் மாநாட்டின் தொடக்கத்தில் 60 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டு இந்த தகவல் வெளியிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் நிதி […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா அவசரக் கோரிக்கை

  • July 24, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்டுத் தாயகம் திரும்ப உதவுமாறு, மத்தியக்கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை  கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நீர்வழியில் “கடுமையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடியை” எதிர்கொண்டுள்ள,  ஆயிரக்கணக்கான மாலுமிகளின் அவல நிலையைச் சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர், வோல்கர் டர்க் அழைப்பு  விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஷபியா மன்டூ கூறினார். ஜெனீவாவில் இன்று நடந்த செய்தியாளர் […]

இலங்கை

சுதந்திரத் தமிழீழம் காண ஐ.நா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – வைகோ அழைப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கையில் தமிழீழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,  “மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும். வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது. இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள […]