உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படை அடாவடி: 60 பேர் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன.

இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய வன்முறை மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளால் இதுவரை குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அடித்து துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற செயல்கள் மூலம் பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி