சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. உலகம் செய்தி

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மாலுமிகளை மீட்கும் முயற்சி வெற்றி

  • July 17, 2026
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு இடம்பெற்றுவருகின்றன. சோமாலிய கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்ணெய்க் கப்பல்களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்பலும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டன. கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக சரக்கு கப்பலில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். எனினும், அதையும், மீறி […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான 'கினெஸட்' (Knesset) கலைக்கப்பட்டது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பரபரப்புக்கு மத்தியில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி தொடர்ச்சியாகப் பல முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அந்நாட்டு நாடாளுமன்றமான ‘கினெஸட்’ (Knesset) கலைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் கோடைகால விடுமுறைக்காக முடங்குவதாக இருந்த கினெஸட் நாடாளுமன்றம், திட்டமிட்டபடி அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் கூட்டப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் சூழலில், அடுத்த தேர்தலில் […]

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

முன்னாள் IGPயின் மரணம் குறித்து தீவிர விசாரணை

  • July 17, 2026
  • 0 Comments

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது நெஞ்சு பகுதியிலேயே துப்பாக்கிச்சூட்டு காயம் இருந்துள்ளது. பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியாலேயே அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

தீவிரமடையும் மோதல்: ஹார்முஸ் நீரிணை முற்றுகையால் உலகளவில் தவிக்கும் எரிசக்திச் சந்தை

  • July 17, 2026
  • 0 Comments

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் கடற்படை மற்றும் புரட்சிகர காவல் படையினரின் (Revolutionary Guards) முக்கிய தளங்கள் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகிலும், கெஷ்ம் தீவிலும் (Qeshm Island) […]

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் 'பம்ப் அண்ட் டம்ப்' (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரங்கேறும் புதிய முதலீட்டு மோசடி

  • July 17, 2026
  • 0 Comments

பிரபல நிதி நிபுணர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பரப்பப்படும் ‘பம்ப் அண்ட் டம்ப்’ (செயற்கையாகப் பங்குகளை உயர்த்தி ஏமாற்றுதல்) மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 16 ஆஸ்திரேலியர்கள் தங்களது 2.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளனர். வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய பிணையங்கள் மற்றும் முதலீட்டு ஆணைக்குழு […]

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மனோ கைச்சாத்திடாதது ஏன்?

  • July 17, 2026
  • 0 Comments

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் கையொப்பமிடவில்லை. நாம் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சுயாதீனமான முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு , “நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாம் இன்னும் கையொப்பம் இடவில்லை. குறித்த பிரேரணை […]

இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்

  • July 17, 2026
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை பாதுகாப்பு செயலர், 5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்திற்கு கலந்துக் கொள்வதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது , நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் சவால்கள், இணையவழி குற்றங்கள், மனிதக் கடத்தல், போதைப்பொருள் […]

அமெரிக்கத் தேர்தல்களில் சீனா தலையிட்டதைக் காட்டும் ஆவணங்கள் என்று கூறி, சில ஆவணங்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று பகிரங்கப்படுத்தினார். உலகம் செய்தி

அமெரிக்கத் தேர்தலில் சீனத் தலையீடு? ஆவணங்களை பகிரங்கப்படுத்திய டிரம்ப்

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தேர்தல்களில் சீனா தலையிட்டதைக் காட்டும் ஆவணங்கள் என்று கூறி, சில ஆவணங்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று பகிரங்கப்படுத்தினார். தான் தோல்வியடைந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தலில் சீனா செல்வாக்கு செலுத்தியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டையும் மீறி, தேர்தல் பாதுகாப்பு குறித்த தனது நீண்டகால குற்றச்சாட்டுகளை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளார். முக்கிய நேரத்தில் (prime-time) ஒளிபரப்பப்பட்ட இந்த 25 நிமிட உரை, வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு […]

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் அரசியல் பதாகை (banner) ஒன்றைக் காட்சிப்படுத்தியது குறித்து சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இன்றைய முக்கிய செய்திகள் செய்தி விளையாட்டு

எல்லை மீறியது அர்ஜென்டினா: FIFA விடம் முறையிட்டது பிரித்தானியா

  • July 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் அரசியல் பதாகை (banner) ஒன்றைக் காட்சிப்படுத்தியது குறித்து சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. மைதானத்தின் நடத்தை விதிகளுக்கு முரணான இந்த நடவடிக்கை, அரசியல் இறையாண்மை தொடர்பாக பிரித்தானியாவில் (UK) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் அர்ஜென்டினா அணி வியத்தகு முறையில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய போது, அர்ஜென்டினா அணியின் தற்காப்பு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

  • July 17, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் காவல்துறைமா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.