இந்தியா செய்தி

4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது.

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது.

கடந்த 26-ம் திகதி நேபாளத்​தில் பெருவெள்ளம் ஏற்​பட்​டது. அன்றைய தினமே இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்​துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்​பப்​பட்​டன.

கடந்த 27-ம் திகதி இந்​திய விமானப் படை​யின் சி-17 குளோப்​மாஸ்​டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்​கள் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் திகதி சி-130ஜே விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்​கள் நேபாள தலைநகர் காத்​மாண்​டுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

கடந்த 29-ம் திகதி இந்​திய விமானப் படை​யின் சரக்கு விமானம் மூலம் மேலும் 11 டன் நிவாரண பொருட்​கள் அனுப்​பப்​பட்​டன.

ஒட்​டுமொத்​த​மாக 4 விமானங்​களில் 68.5 டன் நிவாரணப் பொருட்​களை அந்த நாட்​டுக்கு இந்​தியா அனுப்பி வைத்​திருக்​கிறது. இதில் போர்​வை​கள், தார்​பாலின் கூடாரங்​கள், தூங்​கு​வதற்​கான சிறப்பு படுக்​கைகள் ஆகியவையும் அடங்கும்.

மேலும் நேபாளம் முழு​வதும் பெரு​வெள்​ளத்​தால் 40-க்​கும் மேற்​பட்ட பிர​தான பாலங்​கள் சேதமடைந்​துள்​ளன. அங்கு தற்​காலிக பாலங்​களை அமைக்க இந்​தி​யா​வின் உதவியை நேபாள அரசு கோரி உள்​ளது.

முதல்​கட்​ட​மாக 16 லாரி​களில் தற்​காலிக இரும்பு பாலங்​கள் அமைப்​ப​தற்​கான உபகரணங்​கள், பொருட்​கள் நேபாளத்​துக்​கு அனுப்​பி வைக்​கப்​பட்​டு உள்​ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி