22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, “22-ஆவது திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் என்ன நேரும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் […]













