மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

  • August 12, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள நில அதிர்வு அளவிகளில் (seismometers) பதிவாகியுள்ள போதிலும், அது மிகவும் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்டதால் ஒரே ஒரு நபரால் மட்டுமே உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில், பெர்த் நகரத்திற்கு கிழக்கே 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் Eyre நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘காக்லெபிடி ரோட்ஹவுஸ்’ (Cocklebiddy Roadhouse) அருகே ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைக் கண்டறிந்ததாக Geoscience […]

இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த புதிய சீனத் தூதுவர் உறுதி

  • August 12, 2026
  • 0 Comments

இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார். பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை வந்தடைந்துள்ள அவர், 2025-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் தோளோடு தோள் நின்று பயணிக்கவும், அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர வெற்றி மற்றும் […]

காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

  • August 12, 2026
  • 0 Comments

காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது. கடந்த‌ ஜூலை 28-ம் ஆம் திகதி நடந்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தில் தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 3,500 கன அடி நீரை திறந்​து​விட கர்​நாடகா​வுக்கு உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், தமிழகத்துக்கு நீர் திறக்​கப்​பட​வில்​லை. இந்​தச் சூழ்​நிலை​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தின் 140-வது கூட்​டம் […]

உலகம் செய்தி

ஈரான் அச்சுறுத்தலாலேயே ரகசிய பயணம்: உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

  • August 12, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ” புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே நான் செயற்படுகிறேன். அவர்கள் என்னை வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொல்வதை மட்டுமே நான் செய்ய வேண்டும்” என்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார். கடந்த ஜூலை 8 ஆம் திகதி, ட்ரம்ப் தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் […]

மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு

  • August 12, 2026
  • 0 Comments

மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, அவர்கள் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நடப்பு நூற்றாண்டில் கொலம்பியாவில் ஏற்பட்ட மிகவும் பேரழிவுகரமான நிலநடுக்கமாகும். திங்கட்கிழமை அதிகாலை காபி பயிரிடப்படும் நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட […]

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா?

  • August 12, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமாகவே […]

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செய்தி விளையாட்டு

இந்திய – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்: தடையை தகர்க்க ராஜதந்திர முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தொடர் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஒருநாள் ODI மற்றும் 3 T20 போட்டிகளைக் கொண்ட இந்த வரையறுக்கப்பட்ட ஓவர் தொடர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெறவிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட விரிசல் […]

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

  • August 11, 2026
  • 0 Comments

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். “நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான […]

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

  • August 11, 2026
  • 0 Comments

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, முக்கியமாக கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வரையறுக்கப்பட்ட […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 05 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 11மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் […]