உலகம் செய்தி

ஈரான் அச்சுறுத்தலாலேயே ரகசிய பயணம்: உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

” புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே நான் செயற்படுகிறேன். அவர்கள் என்னை வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் சொல்வதை மட்டுமே நான் செய்ய வேண்டும்” என்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி, ட்ரம்ப் தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் ‘நம்பர் ஒன்’ (Air Force One) அரச விமானத்தில் ஏறுவது போன்ற காட்சிகள் பதிவுசெய்யப்பட்டன.

ஆனால், அதன் பின்னர் உணவளிக்கும் ட்ரக் (catering truck) ஒன்றின் உதவியுடன் அவர் இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையிலேயே ட்ரம்ப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக அன் காரா நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, தான் ஈரானின் முக்கிய இலக்காக இருந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கடைசி நிமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விமான மாற்றமானது, ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட (decoy) விமானத்தில் பயணம் செய்தவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும், தான் ஏறிய இராணுவ ஜெட் விமானமே “அதிக ஆபத்தில்” இருந்ததாக ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வாதிட்டார்.

அமெரிக்க அதிபரின் விமானத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஈரானிடமிருந்து நம்பகமான அச்சுறுத்தல் இருந்ததை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் CBS செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

சாத்தியமான ஈரான் அச்சுறுத்தலுக்குப் பதிலாக மேற்கொள்ளப்பட்ட இந்த நுட்பமான திட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் ரகசியமாக வெளியேற்றப்பட்டது அந்த விமானத்தில் இருந்த செய்தியாளர்களுக்கோ அல்லது சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி