உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

  • June 1, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக விமானப்படை தளமொன்று இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் இந்த எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தளத்தின் மீது ஈரானிய போர் விமானங்கள் குண்டுவீசி அங்கிருந்த இலக்குகளை அழித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னணியில், அண்டை நாடான […]

உலகம் கல்வி

காசாவிலும் இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

  • June 1, 2026
  • 0 Comments

காசா நகரின் மீன்பிடித் துறைமுகம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், Al-Hatabiya மற்றும் Beit Lahiya போன்ற பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காசாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களால் உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் அதனை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது.

ஆஸ்திரேலியா செய்தி

” புலம்பெயர் இலங்கையர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்”

  • June 1, 2026
  • 0 Comments

  ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசாங்கத்தின் மீது புலம்பெயர் இலங்கையர்கள் வைத்துள்ள தளராத நம்பிக்கைக்காக அமைச்சர் நன்றி […]

செய்தி விளையாட்டு

மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது RCB!

  • June 1, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள […]

இலங்கை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடிய இருவர் கைது!

  • May 31, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச […]

ஐரோப்பா செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு பிரான்ஸ் அழைப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் லெபனானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைக் கைப்பற்றியதோடு, அந்நாட்டின் எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி வருவதை பிரான்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தற்காப்பு உரிமை உண்டு என்பதை அங்கீகரித்தாலும், லெபனான் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், அமைதியை […]

ஆஸ்திரேலியா செய்தி

பழைய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு வியூகம் அமைக்கும் ஆஸ்திரேலியா

  • May 31, 2026
  • 0 Comments

ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Second-hand) நீர்மூழ்கிக் கப்பல்களாகவே இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டில் (Shangri-La Dialogue) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” ஆக்கஸ் (AUKUS) முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு […]

உலகம் செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’- இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் Pete Hexathon தெரிவித்துள்ளார். இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இங்கு உரையாற்றுகையிலேயே […]

உலகம் கல்வி

கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் எல்லைப்பகுதிகளை நோக்கி எடுக்கப்படும் எந்தவொரு பகைமை நடவடிக்கையையும் முந்தைய தாக்குதல்களை விடவும் பலமடங்கு ஆற்றலுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஈரானிய இராணுவம் எதிரிகளின் சவால்களை முறியடிக்க உறுதியுடனும் முழு பலத்துடனும் நிலைபெற்றுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் […]