உலகம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அவசரகாலநிலை அறிவிப்பு

  • August 8, 2026
  • 0 Comments

கனடா முழுவதும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) சம்மர்லேண்ட் மாவட்டம் (Summerland) இன்று அவசரகால நிலையை அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதிகமான நிலம் காட்டுத்தீக் காரணமாக  சேதமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சம்மர்லேண்ட் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கொதித்தாரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் […]

உலகம்

வர்ஜீனியாவில் அவசரநிலை பிறப்பிப்பு – பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

  • July 23, 2026
  • 0 Comments

வர்ஜீனியாவின் 55 மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளும் வணிக நிறுவனங்களும் நீரில் மூழ்கின. அத்துடன் பாலங்கள் உடைந்ததுடன், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக ஆளுநர் பேட்ரிக் மோரிசி (Patrick Morrisey) அவசரநிலையை பிறப்பித்தார். அத்துடன் 100 தேசிய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளார். அதே நேரத்தில், தேசிய வானிலை ஆய்வு மையம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் குறித்து அவசர […]

உலகம்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிப்பு

  • June 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில்  கனமழையால்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களைச் சென்றடைய தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக மாகாண ஆளுனர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் ஏற்கனவே உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்த அவர், இறப்பு தொடர்பான சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றார்.    

உலகம்

நியூசிலாந்தில் புயல் நிலைமை : அவசரநிலை அறிவிப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் வீசிய புயல் காரணமாக இன்று விமான மற்றும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும் நியூசிலாந்து தலைநகரின் தெற்குக் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த மோசமான வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். வெலிங்டன் விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டதாகவும், 08 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலத்த காற்றின் காரணமாக தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக […]

இலங்கை

அவசரகால நிலை நீட்டிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

நாட்டின் பொது அவசரகாலநிலை  மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.  இதன்போது  ஆதரவாக 145 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய 136 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.