எல் நினோ தாக்கம் – பனாமாவில் அவசரநிலை அறிவிப்பு, கப்பலின் எண்ணிக்கையும் குறைப்பு
எல் நினோ வானிலை நிகழ்வால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்வாய்க்கு நீர் வழங்கும் இரண்டு செயற்கை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பனாமா கால்வாய் ஆணையம் கூறியது.
இதற்கமைய கப்பல்களின் எண்ணிக்கை 36 இல் இருந்து 32 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே எல்நினோ காரணமாக பனாமா நாடு தழுவிய அசரநிலையையும் பிறப்பித்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பீட்டுப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, 2026-ஆம் ஆண்டின் எல் நினோ மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை, ஆனால் மத்திய அமெரிக்கா ஏற்கனவே கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளும் அவசரநிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




