பொழுதுபோக்கு

படத்தின் கதை மாற்றப்பட்டதால் விலகினார் நயன்தாரா!

  • April 24, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகும் […]

உலகம் செய்தி

உள்நாட்டு விமான சேவையை நாளை ஆரம்பிக்கிறது ஈரான்!

  • April 24, 2026
  • 0 Comments

  ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரமான மஷ்ஹத் இடையிலான விமானப் போக்குவரத்து நாளை (25) சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. நாட்டின் வான்வழிப் பாதையை படிப்படியாகத் திறக்கும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் 18 முதல் ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய நிலையில், முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. புனிதத் தலங்களைக் கொண்டுள்ள […]

செய்தி

விடுதலைக்காக ஒலித்த குரல்களுக்கு நன்றி: கடத்தப்பட்ட ஊடகர் உருக்கம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க சுயாதீன ஊடகவியலாளர் Shelly Kittleson , தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக நன்றி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற மிலிஷியா குழுவினராலேயே இவர் கடத்தி செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னை மீட்பதற்காகப் பாடுபட்ட அரச அதிகாரிகள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் நண்பர்களின் தீவிர முயற்சியால் தனது விடுதலை சாத்தியமானதாக Shelly Kittleson குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

உலக அமைதிக்கான நடை பயணத்தில் பிரதமர் பங்கேற்பு!

  • April 24, 2026
  • 0 Comments

உலக அமைதியை வலியுறுத்தி “அமைதிக்கான நடைபயணம்” எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஸ்ரீ […]

இந்தியா செய்தி

இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் மே 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல தமது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தானும் தடை விதித்திருந்தது. இவ்வாறு […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை மீள ஆரம்பிக்கவும்: ஈரான், அமெரிக்காவுக்கு திருத்தந்தை அழைப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார். போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெறுப்புணர்வை விடுத்து அமைதி கலாச்சாரத்தை வளர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார். லெபனான் பயணத்தின் போது தான் சந்தித்த சிறுவனொருவர் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, வன்முறைக்கு […]

இலங்கை செய்தி

GSF படைப்பிரிவு குறித்து ஐ.நாவில் இலங்கை ஆராய்வு!

  • April 24, 2026
  • 0 Comments

ஹைட்டிக்கு haiti முன்மொழியப்பட்ட கும்பல் ஒடுக்குதல் படையுடன் Gang Suppression Force (GSF) இணைந்து சேவையாற்றுவது தொடர்பில் இலங்கை ஆராய்ந்துவருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினருக்கும் , ஐ.நா மூத்த அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர், நடவடிக்கை ஒத்துழைப்புக்கான பிரதிப் […]

விளையாட்டு

அபார வெற்றியுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை!

  • April 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், Mumbai Indians அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Chennai Super Kings வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற Mumbai அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Chennai அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 54 பந்துகளில் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • April 24, 2026
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான $276 மில்லியன் மதிப்பிலான முதல் முக்கிய ஒப்பந்தத்தை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது, மேலும் இதற்கான வடிவமைப்புப் பணிகளை ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் உற்பத்தி வேகம் மந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட […]