12 வருடங்களுக்கு பிறகு களமிறங்கி வென்று காட்டிய Ivory Coast!
12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் களமிறங்கிய Ivory Coast அணி, ஈக்வடார் அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மாற்று வீரராக வந்த அமத் டயல்லோ, அபாரமான கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகள் நூலிழையில் தவறினாலும், Ivory Coast அணியின் தற்காப்பு ஆட்டம் ஈக்வடார் வீரர்களைத் தடுத்தது.
பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈக்வடார் அணிக்கு பெரும் ரசிகர்கள் ஆதரவு இருந்தபோதிலும், அவர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் Ivory Coastஅணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளதுடன், தனது அடுத்த போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.





