உலகம்

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா? உளவு தகவல் வழங்கியது யார்?

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், […]

ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் […]

உலகம் செய்தி

பாரிய வன்வழித் தாக்குதலை முறியடித்தது சவூதி!

  • March 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படைகள் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. ஷைபா எண்ணெய் வயல் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆளில்லா விமானங்கள் மற்றும் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ballistic m ஏவுகணை ஆகியவை இடைமறித்து அழிக்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எண்ணெய் தளம் நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சியை கட்டியெழுப்ப மஹிந்த அணி வியூகம்!

  • March 7, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கிராமிய மட்டத்தில் மேலும் வலுப்படுத்தி, மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய […]

இலங்கை செய்தி

உரிய மீளாய்வின் பின்னரே வடக்கில் காணி விடுவிப்பு!

  • March 7, 2026
  • 0 Comments

” இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது.” இவ்வாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய […]

இலங்கை செய்தி

இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஈரான் சரணடைந்தால் மட்டுமே பேச்சு: ட்ரம்ப் திட்டம்!

  • March 6, 2026
  • 0 Comments

நிபந்தனையற்ற சரணடைவுக்கு இணங்கினால் மட்டுமே ஈரானுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவ்வாறு நடந்து தகுதியான தலைமையை ஏற்றுக்கொண்டால் ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவி வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை மாற்றி, நட்பு நாடுகளுடன் இணைந்து அந்நாட்டை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சரணடைவதற்கு தயாரில்லை என ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை: பிரதமர் விளக்கம்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது. இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் Prime Minister கேள்வி […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை Parliament மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தை அடுத்து இன்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 08 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 100 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச்சட்டம் நீடிப்பு: சஜித் அணி போர்க்கொடி!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல J.C. Alawatthuwala தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. எனவே, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதன் பின்னணியில் வேறு […]

error: Content is protected !!