இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீக்கம்

'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது.

‘டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார்.

“டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறி சில தரப்பினர் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை எவ்வித தடையுமின்றி விரைவாக முன்னெடுப்பதற்காக மட்டுமே அரசு இதனை அமுல்படுத்தியது.

இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு சாதாரண குடிமகனுக்கோ, ஊடகவியலாளருக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று நாம் அன்று உறுதியளித்திருந்தோம்.

நாம் வாக்குறுதி அளித்தபடியே, கடந்த காலங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளோம்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை