மத்திய கிழக்கு வான்வெளி குறித்து எச்சரிக்கை
ஈராக் மற்றும் லெபனான் வான்வெளியைப் பயன்படுத்துவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை (EASA) மீண்டும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், வான்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் திடீர் பதற்றம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேல் பறக்கும் வணிக ரீதியான விமானங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த பாதுகாப்பு ஆலோசனையை, வரும் ஜூலை 8-ஆம் திகதிவரை நீட்டிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
மோதல் போக்கு நிலவும் பகுதிகளில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




