ஆஸ்திரேலியா உலகம் செய்தி

உள்ளூர் பறவைக்கும் ஆஸ்திரேலியாவில் H5 வைரஸ் தொற்று

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, ஆஸ்திரேலியாவில் உறுதி செய்யப்பட்ட பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் அனைத்தும், துணை அண்டார்டிக் (sub-Antarctic) பிராந்தியத்தில் இருந்து பறந்து வந்த புலம்பெயர்ந்த பறவைகளிலேயே கண்டறியப்பட்டன.

தென்கிழக்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ரோப்’ (Robe) என்ற நகரில் கண்டறியப்பட்ட பறவை ஒன்றில் இந்த வைரஸ் தொற்று இருப்பதை ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் (Julie Collins) தெரிவித்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டு சம்பவங்களும், மேற்கு ஆஸ்திரேலியாவில் மற்றொரு சம்பவமும் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளூர் வனவிலங்குகள் மத்தியில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றும், இந்த வைரஸ் விவசாயத் துறைகளுக்குப் பரவியதற்கான சான்றுகள் இல்லை என்றும் காலின்ஸ் கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி