உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேலை பழி தீர்ப்போம்: ஈரான் தளபதி சபதம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை பழிதீர்ப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி சபதம் செய்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் வரலாற்று நினைவிலிருந்து ஒருபோதும் அழியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி (Brigadier-General Ahmad Vahidi),

“நீதி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு தகுந்த பதில்டி கொடுக்கப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து செபா (Sepah) செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அமெரிக்காவின் குற்றவியல் தலைவர்களும், இஸ்லாமிய புரட்சி மற்றும் எதிர்ப்பு முன்னணியின் அனைத்து எதிரிகளும் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும்; இந்த தெய்வீகத் தலைவரை கோழைத்தனமாக படுகொலை செய்ததன் மூலம், அவர்களால் ஒருபோதும்… எதிர்ப்பு இயக்கத்தின் கொடியைக் கீழே வீழ்த்த முடியாது.

அமிர்தர்களை (Martyrs) இழந்ததற்கான பழிவாங்கலும், இதற்கு காரணமானவர்களுக்கான தண்டனையும்… ஒரு திட்டவட்டமான, நியாயமான மற்றும் மறக்க முடியாத கோரிக்கையாகத் தொடரும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி