இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]

உலகம் செய்தி

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.

செய்தி விளையாட்டு

அமெரிக்காவில் களமிறங்கும் ஈரான் வீரர்கள்?

  • April 16, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கு ஈரான் அணி அமெரிக்கா வரும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஈரான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி அமெரிக்காவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிகள் நால்வரை கைது செய்தது ஈரான்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது. ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து இணையம் வழியாக கைதான சந்தேகநபர்கள், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளனர். எனினும், ஈரான் உளவுத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் மூலம் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர் […]

அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி பிரச்சினை: சர்வதேசம் கழுகுப்பார்வை!

  • April 16, 2026
  • 0 Comments

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் Selvarajah Gajendran தெரிவித்தார். அமைச்சர்கள் குழு விரைவில் வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காகவே அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். தந்தை செல்வா கலயரங்கில் நேற்று நடைபெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் […]

உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைகளுக்கு பூட்டு: 21 ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரானில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்விவரை அனைத்து நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு இணையவழியில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் சூழலைக்கருத்திற்கொண்டே இம்முடிவு […]

உலகம் செய்தி

லெபனானில் 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு UN’s refugee agency கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, லெபனானுக்கு சர்வதேச சமூகம் அவசரகால நிதி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான முன்னுரிமையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் வலியுறுத்து!

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Bagher Ghalibaf வலியுறுத்தியுள்ளார். அத்துடன், லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு விரிவான போர்நிறுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். லெபனானில் அமைதி திரும்புவது ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகவே அமையும் எனவும் ஈரான் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான […]

இலங்கை செய்தி

வடக்கில் திணைக்களங்களை கண்காணிப்பதற்கு விசேட குழு!

  • April 16, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், நேற்றுப் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:- மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி […]