62 நாட்களுக்குள் லெபனானில் 2,696 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2026 மார்ச் 2 முதல் இதுவரையில் லெபனானில் 2,696 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8,264 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது. குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்திவருகின்றது. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அமைதி பேச்சுக்காக ஈரானில் முன்வைத்துள்ள 14 பரிந்துரைகளில், லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும். அதேவேளை, காசாவிலும் […]













