இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

இலங்கையின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் காவல்துறைமா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை