அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ள பின்னணியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. உலகம் செய்தி

‘சொல் அல்ல செயலே முக்கியம்’ – ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி

  • June 23, 2026
  • 0 Comments

வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைகளைச் சரியாகச் செயல்படுத்துவதைப் பொறுத்தே அமையும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார். வெறும் பேச்சுக்களைக் காட்டிலும் நடைமுறைச் செயல்பாடுகளே முன்னேற்றத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அசல் உடன்படிக்கைக்குப் புறம்பான கருத்துக்கள் பேச்சுவார்த்தைக்கு எவ்வித உதவியும் செய்யாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி சோதனைகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் […]

அமெரிக்க- இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் கழுகுப்பார்வை செலுத்திய அமெரிக்க ராஜதந்திரி

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார். துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்கவுடன் இணைந்து, போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டதாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க- இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

புலிகளின் முகாம்களிலிருந்து ராணுவம் கைப்பற்றிய தங்கத்தின் விபரம் வெளியானது

  • June 23, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கை இராணுவத்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் இருந்து தங்கம் பெறப்படவில்லை. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது புலிகளின் முகாம்கள் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் இருந்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தங்க […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்குகிறது ஐக்கிய அரபு அமீரகம்

  • June 23, 2026
  • 0 Comments

பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அகஸ்தீர் வான்பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை விற்பனை செய்வது தொடர்பில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சு நடத்திவருகின்றது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றன. அதிவேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை நிலப்பகுதியிலிருந்தும், கடலில் இருந்தும், வானில் இருந்தும் ஏவ முடியும். இந்தியாவிடம் இருந்து முதன் முதலில் பிரமோஸ் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு பிலிப்பைன்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, […]

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் சகோதரரான பஸில் ராஜபக்ச ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர். அரசியல் இலங்கை செய்தி

அதிகாரத்துக்காக எதையும் செய்யும் ராஜபக்சக்கள்

  • June 23, 2026
  • 0 Comments

“அதிகாரத்துக்காக ராஜபக்சக்கள் எதையும் செய்வார்கள். தமது திட்டங்களுக்குத் துணைநிற்கும் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளையும் அவர்கள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சுரேஷ் சலே விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.” -இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “குற்றம் இழைத்தவர்கள் தாமாக முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே, அவர்களிடமிருந்து தகவல்களைச் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இது விசாரணை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். உலகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் […]

ராய் மோர்கன் நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் , இரு கட்சிகளுக்கு இடையிலான விருப்பத் தேர்வின் அடிப்படையில் தொழிற் கட்சிக்கு 51 சதவீதமும், ஒன் நேஷன் கட்சிக்கு 49 சதவீதமும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பிரித்தானிய பிரதமரையடுத்து ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அரசியல் நெருக்கடி

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமரைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று One Nation கட்சி தலைவர் Pauline Hanson வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது பொதுத் தேர்தல் (Federal election) நடத்தப்பட்டால், ஆளும் தொழிற்கட்சிக்கு கட்சிக்கும் (Labor Party) பாலின் ஹான்சனின் ஒன் நேஷன் (One Nation) கட்சிக்கும்  இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரபல […]

பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில அரசியல் இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதய கம்மன்பில சர்ச்சை கருத்து

  • June 23, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடையவில்லை. மாறாக பேராயரே பிரதிபலன் அடைந்துவருகின்றார்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே பிரதிபலன் அடைந்தார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர். 2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் […]

ராஸ் லப்பான் துறைமுகமானது உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகமாகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய எல்என்ஜி (LNG) ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எரிவாயு ஆலையில் வெடி விபத்து: 12 இந்தியர்கள் பலி

  • June 23, 2026
  • 0 Comments

கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது. ராஸ் லப்பான் (Ras Laffan) தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ள நகரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக கத்தார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெடிவிபத்தின் காரணமாக அந்த நகரத்தின் […]

Norway have lost only once in their last 18 matches and will take on France in a compelling battle for top spot in the group in Boston on Friday செய்தி விளையாட்டு

அசத்தலான ஆட்டம்: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது Norway

  • June 23, 2026
  • 0 Comments

New York நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற (Group I) லீக் போட்டியில், நோர்வே அணி 3-2 என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் (Last 32) தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டு கோல்களை (Brace) அடித்து அசத்தினார். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில்,நோர்வே அணியின் மாற்று வீரர் மார்கஸ் ஹோம்ஹிரென் பெடர்சன் ஒரு கோல் அடித்து அணியை […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 412 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • June 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு […]