உலகம் செய்தி

லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு: மக்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

  • May 1, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் புதிய இடம்பெயர்வு உத்தரவை வெளியிட்டுள்ளது. ஹபூச் நகரில் வசிக்கும் மக்களை உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு, திறந்த வெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ, சமூக வலைத்தளமான X இல் வெளியிட்ட அறிவிப்பில், “ஹிஸ்புல்லா தொடர்புடைய இடங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது” என எச்சரித்துள்ளார். போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், […]

இலங்கை செய்தி

திறைசேரி சம்பவம் – நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் குறித்து ஆராய விசேட குழு 

  • May 1, 2026
  • 0 Comments

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் […]

செய்தி தமிழ்நாடு

அதிர்ச்சியில் சென்னை மக்கள் – அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை 

  • May 1, 2026
  • 0 Comments

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ கிராம் நிறையுடைய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் […]

உலகம் செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேல் பெரும் தாக்குதல்- ஒருவர் காயம், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரமல்லாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புர்கா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ரப்பர் பூசப்பட்ட உலோகத் தோட்டாக்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் ரப்பர் தோட்டாக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளார். மேலும், கிராம மக்கள் பலர் கண்ணீர்ப்புகை […]

செய்தி தமிழ்நாடு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித்து விளையாட்டுகள்

  • May 1, 2026
  • 0 Comments

மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாட்டில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் திகதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானதுதான் […]

உலகம் செய்தி

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி‌ -இராணுவச் சிறையில் தடுத்து வைப்பு

  • April 30, 2026
  • 0 Comments

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புரட்சியை வழிநடத்திய இராணுவத் தலைவர் Min Aung Hlaing வெளியிட்ட அறிக்கையில், “அவரது மீதமுள்ள தண்டனை குறைக்கப்பட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அதை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகமான பின்னர், ஆங் சான் சூ கீ […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் […]

உலகம் செய்தி

மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள மிகவும் ஏழ்மையான, பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கி உதவி செய்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் உணவு நெருக்கடிக்கான உண்மையான தீர்வு போர் நிறுத்தமே என்றும், அந்நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நிவாரண உதவிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

உலகம் செய்தி

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

  • April 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு […]

இலங்கை செய்தி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு – இதுவரை 241 மனித எச்சங்கள் அடையாளம்

  • April 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் […]