சூடானில் மீண்டும் போதீவிரமடையும் போர்: 2 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்வு
சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல் ஒபெய்ட் (El Obeid) நகரில் உள்ள முக்கிய நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தொடர் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அருகிலுள்ள வட டார்புர் (North Darfur) மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பருவகால வெள்ளப்பெருக்கும் இந்த […]













